Wednesday, February 27, 2013


பயணம்!


கனவுகளே சிறகுகளாக , 
நாளைய விடியலை நோக்கி நம் பயணம்!
நேற்றைய தோல்விகளுக்கு விடை கொடுக்க ,
புதிய முயற்சி தொடர,
நாம் எழுவோம் உறக்கத்திலிருந்து !

அறியாமை இருள் அகன்று ,
ஆன்ம ஒளி யாவரும் பெற,
 நம் பயணம் தொடரட்டும்!

-ஞானகுமாரன்.






சதுரகிரி

சதுரகிரி  யாத்திரை!

மூலிகைக் காடு, சித்தர்கள் வாழும் மலை, மலை மேல் சிவன் மகாலிங்கமாய்! அரிய பயணம்!

சமத்துவம் பேணும் ஒரே இடம், மலை மேல் தங்க இடம் , உண்ண உணவு அனைவருக்கும் ஒரே வகை!

அமைதியைத் தேடி எங்கும் செல்ல வேண்டாம் , சதுரகிரி வாருங்கள், வாய்ப்பிருந்தால் சில நாட்கள் தங்கலாம், மனம் இலகுவாகும்.

இயற்கையை உணருங்கள்! இறையனுபவம் நிறைவாகும்!



கொஞ்சம் கவிதை!


வெற்றியை வென்றிடு!




நினைத்துப் பார்த்தால், களைத்துப் போவாய்!

நேற்றைய வருடங்களை!, நேற்றைய வடுக்களை!!

காலம் ஒரு மாயச்சுழல், இளைத்தவனை தூக்கி வீசும் !

எதிர்த்துப் போராடுபவனை, அரவணைத்துக்கொள்ளும்!

புரிந்து கொள் !

நேற்றைய தோல்விகளே , இன்றைய வெற்றிக்கு அடித்தளம்!

முயற்சி தான் வாழ்க்கை, மீண்டும் மீண்டும் விழுந்தாலும்,

வீரியமாய் எழு!  வீறு கொண்டு போரிடு! தைரியமாக எதிர்த்து நில்! 

கொண்ட கொள்கை தான், இலட்சியம்!

இலட்சியத்தில் உறுதிகொண்டு, வெற்றியை வென்றிடு!


துணிவுடன் வாழ்ந்திடு!, என்றும் உலகம் நமக்கே என்று ! 



- ஞானகுமாரன்.















Total Pageviews