Sunday, March 24, 2013

வணக்கம் தமிழகம்!


தமிழர் வாழ்வும் தமிழர் உறவும் செழிக்க,

நல் வாழ்த்துக்கள்!

Thursday, March 21, 2013

தமிழன்



தமிழா!

எங்கே , போகிறது, இந்திய அரசியல் களம்?
அதிரடி மாற்றங்கள் , அடுத்தடுத்து, தமிழக அரசியல் களத்தில்!
எங்கே போயின, ஈழத்தமிழர் பாதுகாப்பு கேடயங்கள்?
என்ன நடக்கிறது , ஜெனிவாவில்?
ஓ! நாம் தமிழ்நாட்டு , தமிழர்களா?
நாம் பிரிந்தே போராடுவோமா , மீனவர் பிரச்னை முதல்,
மாணவர் பிரச்னை வரை !

தமிழன் என்றொரு , இனம் உண்டு!
அவன் உலகை ஆண்டது , அந்த காலம்!
அவனை அவன் ஆண்ட,
லங்கா தேசம்  , ஆள்வது, இந்தக் காலம்!
அவன் தனித்தனியே, பிரிந்து கிடக்கின்றான் இன்று!
அவனிடம் எல்லாம் உண்டு , இல்லாதது, ஒற்றுமை!
அதனால் தான், தமிழன் , தேசம் வாரியாக
சாதி வாரியாக, அரசியல் வாரியாக, பிரிந்து கிடக்கின்றான்!
தமிழகத்திலோ , இன்னும் உச்சம்!
ஆயிரம் பெரியார் வந்தாலும் , ஒழிக்க முடியா துயரம், 
தமிழன் ஒடுக்கப்படுவது! ஒழிக்கப்படுவது!
எங்கே போனது , உலகை ஆண்ட வீரம்?

வாழ்க! தமிழர் ஒற்றுமை!

வளர்க ! தமிழர்  உலகம்!

Wednesday, March 20, 2013

வணக்கம்!


தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு, 

இனி வரும் காலம் சிறப்பாக அமைய,

நல வாழ்த்துக்கள்!







Wednesday, March 13, 2013

சதுரகிரி யாத்திரை!

சதுரகிரி யாத்திரை!


சதுரகிரி மலை ஏறும் 
அன்பு உள்ளங்களே,
வழி கொடுங்கள் , 
மலை ஏறுவோருக்கு!

பாதையை அடைத்துக்கொண்டு,
நடக்க வேண்டாம்,
நாம் மட்டும் மலைக்கு
வரவில்லை!
மலை ஏறும்போதும்,
இறங்கும் போதும்,
இறை உணர்வாளர்களின்,
அன்பர்களின்,
மனதை வருத்தும்.,

நடையாளர்களின் அலைஇல்லா 
பேசிகளினால்  ,
3ம் தர திரைஇசை
வழியெங்கும்!

[ பாடல்கள் எனக் கூற
இயலாத வண்ணம்,
மிகை இசைக்கலவை]

இன்னும் பிற..!
யோசிப்போம்! 
சமத்துவம் பேணுவோம்!

அனைவரின் சதுரகிரி யாத்திரை ,
நலமுடன் அமைய, 
நாமும் நம் பங்களிப்பை , 
இயன்ற அளவு அளிப்போம்!
ஆன்ம நலம் பெருக்குவோம்!

சதுரகிரி நாடும் யாவருக்கும் ,
எப்போதும் அன்னமிடும்
கஞ்சி மடம்
போல இல்லாவிடினும் !

நம்மால் இயன்ற அளவு !!


Wednesday, March 6, 2013

ஒரு விநாடி யோசித்திருந்தால்,  ?

நிறைய நிகழ்வுகள், நலமாக,

 அமைந்திருக்கும்!

யோசிப்போம் ஒரு விநாடி, ஒரே ஒரு விநாடி!


வாழ்க! வாழுங்காலம் நலமாக!!



திரு அண்ணாமலை!


திரு அண்ணாமலை!

நினைக்க முக்தி தரும் திருஅண்ணாமலையை , நினைத்த மாத்திரத்தில் தரிசித்தால்,எவ்வளவு மன நிறைவு!


இனி , திரு அண்ணாமலையாரை , ஒரு விநாடி நேரத்தில் தரிசிக்கலாம்!

 திரு அண்ணாமலை இணைய தளம் வாயிலாக!

திரு அண்ணாமலை நேரடி மலைக்காட்சி!

அருணாச்சலா இணையதளத்தின்,
ஈடிலா, இச்சேவை.,போற்றுதலுக்குரியது!

Tuesday, March 5, 2013

1900 களின் சமய,கலை,சமூக ,  இலக்கியவாதிகளின்
 அனைத்துப் படைப்புகளையும் ஒருங்கே,
 மின் நூல் வாயிலாக, நாம் படித்து மகிழ , ஒரு அரிய தளம்!


1900 களின் எழுத்து வேந்தர்களின் படைப்புகள்!






தமிழ் மொழியின் பாரம்பரிய தொன்மையை , பழமையைப்  போற்றிப்  பாதுகாக்கும் , உன்னத இணைய தளம்!


தமிழில் இணையம் வழியாக பட்டம் பெற , இந்த இணைய தளம் !

தமிழ் இணையப் பல்கலைக் கழகம்!

Monday, March 4, 2013




சித்தர்கள் மற்றும் சித்த மருத்துவ ஆர்வம் உள்ளவர்களுக்கு ;




இணையத்தில் தேட!



ஆன்மிக தேடல் மற்றும் சித்த மூலிகை ஆர்வமுள்ளவர்களுக்கு மிகப்பயனுள்ள ஒரு வலைத்தளம்.




Saturday, March 2, 2013

மூலிகை - சாப நிவர்த்தி





 மூலிகை - சாப நிவர்த்தி 


சித்தர்கள் சொல்லிய வைத்திய முறைகளில், மனிதர்களுக்கு நோய் குணமாக , அவர்தம் உடல் நலம் சீராக, குறிப்பிட்ட மூலிகைச் செடிகளை 
சாப நிவர்த்தி எனும் குறிப்பிட்ட மந்திரம் உச்சரித்து மற்றும் தனிப்பட்ட வழிமுறைகளின் மூலம்  எடுத்து , குறிப்பிட்ட பக்குவத்தில் கொடுத்து வர , நோய் நீங்கி மனிதன் நெடு நாள் சிறப்பாக வாழ்வானாம்!

மனிதர்க்கும் உண்டா சாப  நிவர்த்தி?     

நம்மை வழி நடத்தும் சித்தர்கள் பல முறைகளில் சிறப்பாக, மனிதர்களின் சாப நிவர்த்தி பற்றி எழுதி வைத்திருக்கிறார்கள். 

அவற்றில் எல்லாம் தலையாய அறிவுரையாக, தேர்ந்த குருவின் அருளால் மட்டுமே , அதை அடைய முடியும் என்ற குறிப்புகளைக்  காண முடிகிறது.

தேர்ந்த குருவினை அடைந்து, அவரின் அருளாசியைப் பெற்று, அதன் மூலம் சாப நிவர்த்தி பெறலாம்.

இக்காலத்தில் அது கடினம் என எண்ணினால் , தங்கள் செயல்களில், எண்ணங்களில்,சிந்தனைகளில்  மற்றும் பேச்சுகளில், மற்றவர்க்கு நன்மை செய்யாவிடினும், பொல்லாங்கு மற்றும் தீங்கு நினையாமல் இறை சிந்தனையில் இருந்தாலே, நாம் சாப நிவர்த்தி பெற்று அடையும் நற்பலன்களையெல்லாம்,  இந்த நல்ல எண்ணத்திலான, செயல்களினால் அடைந்து, பெருவாழ்வு வாழலாமாம்!

வணக்கம்!

ஞானக்குமாரன்.






Total Pageviews