Monday, October 21, 2013

அன்பு வலைத்தள வாசகர்களே!

அன்பு வலைத்தள வாசகர்களே! 
உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .

ஒரு வினாடி என்ற இந்தத் தளம் பொதுவான தகவல்களுடன் , சற்றே வாழ்வியல் காரணிகளையும் மூலிகைகளின் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வையும் அவசியத்தையும் பகரும் தளமாக உருவாக்க முயன்று வருகிறோம்.

இங்கே எமது பதிப்புகளை நாள் தோறும் அன்பர்கள் வாசித்து செல்வதை இணைய பதிவின் அறிந்து வருகிறோம். எமது பதிவினை வாசிக்கும்   அன்பர்கள் , பதிவுகள் குறித்த தங்கள் மேலான கருத்துக்களை பகர்ந்து கொண்டால், மிக்க நன்றியுடையவர்களாக இருப்போம், மேலும், தங்களின் எண்ண ஓட்டத்திற்கேற்ப பதிவுகள் இட , எமக்கு உதவிகரமாக அமையும்.

அன்பர்களின் எண்ணங்களை, மேலான கருத்துகளை, ஆர்வமுடன் எதிர்நோக்குகிறோம், நன்றி!

நல எண்ணங்களால் அன்பர் நலன் நாடும்,
அன்பன்,

ஞானகுமாரன்.


Saturday, October 12, 2013

அன்பு வாசகர்கள் , மூலிகை ஆர்வலர்கள் 
அனைவருக்கும் எமது உளங்கனிந்த விஜயதசமி , 
சரஸ்வதி பூஜை திருநாள் நல்வாழ்த்துக்கள்!



இந்தப் புனித நன்னாளில் , இயற்கை மூலிகை வழி நின்று தேக ஆரோக்கியம் பெறவும் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் வாழ்வில் எல்லாவகை செல்வங்களும் பெற்று , எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று நல வாழ்வு வாழ , அன்னை விஜயலட்சுமியை , அன்னை சரஸ்வதியைப் போற்றி , முப்பெரும் தேவியர் பாதம் பணிந்து பிரார்த்திக்கிறோம்!

அன்புடன்,

ஞானகுமாரன்.

Saturday, October 5, 2013

மூலிகைகள் மற்றும் அவற்றின் உபயோக முறைகள்

வணக்கம் அன்பு வாசகருள்ளங்களே! 

தவிர்க்கமுடியாத சூழலால் பதிவுகள் இட  கால தாமதம் ஏற்பட்டதற்கு ,வருந்துகிறேன்.இன்று மூலிகைகள் மற்றும் அவற்றின் உபயோக முறைகள் பற்றி பார்க்கலாம்.

இன்று நமது பாரம்பரிய சித்த மூலிகை மருத்துவம் , முதல் வைத்திய முறையிலிருந்து மாறி, அலோபதி மற்றும் மற்றைய மருத்துவ முறைகளில் தீர்வு கிடைக்காததால் , மக்களால் நாடப்படும் கடைசி இடத்தில் இருந்தாலும், மீண்டும் நமது சித்த மருத்துவம் மக்களால் பெரிதும் விரும்பப்படும் காலம் , விரைவில் மலரும் என்ற நல நம்பிக்கையுடன் , இன்றைய பதிவினை அணுகலாம்.

எந்த மருத்துவ முறைகளிலும் , மருந்துகளுக்கு உரிய வீரியத்தினால், பக்க விளைவுகள் சிறிது இருக்கும், அதிகமாக அலோபதியிலும், குறைவாக சித்த மருத்துவத்திலும் காணப்படும்.

அந்த சிறிய அளவு பக்க விளைவுகளையும்  நீக்கும் விதமாகத்தான் , சித்த மருத்துவர்கள் அந்த முலிகைகளுடன் வேறு சில மூலிகைகள் சேர்த்து, பக்க விளைவுகளை கட்டுப்படுத்திவிடுவர். 

எனவே , எந்த மருந்தையும் அது சித்த மூலிகை மருந்துகளானாலும்  சரி, மருத்துவர் பரிந்துரைத்த காலத்திற்கு மட்டுமே சாப்பிட வேண்டும், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என அறிந்த அன்பர்கள் , மருந்திற்கும் இது பொருந்தும் என மனதில் கொள்ள வேண்டும். 

தொடரும்..


Total Pageviews