Wednesday, August 31, 2016

வீடுகளில் அவசியம் இருக்கவேண்டிய சில மூலிகைகள்!

மூலிகைகள் !


தரமான மூலிகை மருந்துகள் , உங்கள் ஆரோக்கியத்தின் அடையாளம்!


வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய சில மூலிகை மருந்துகள்!


1. திரிபலா சூரணம் -   உடல் இளமை மற்றும் ஆரோக்கியத்திற்கு.

2. கடுக்காய் சூரணம்- மலச்சிக்கல் தீர - உடல் நலம் பேண.

3.திப்பிலி - சளி தொல்லை தீர - இரசம் செய்யலாம் அல்லது மிளகு சேர்த்து சூடாக்கி பருகலாம்.

4. கற்பூரவள்ளி இலை அல்லது தைலம் - தலைவலி, மூக்கடைப்பு மற்றும்        குறட்டை தீர.

5.காலை இஞ்சி, மதியம் சுக்கு உணவில் சேர்த்தும் இரவில் கடுக்காய் பொடியை உணவுக்குப்பின் உண்டு  வர, உடல் வலிமையும், பொலிவும் பெறும். நோய்கள் அகலும்.

6.பிரண்டையை பொடி செய்தோ அல்லது துவையல் செய்தோ உண்டு வர, மூட்டு  வலியும் உடல் வலியும் விலகும்.

மேலும் தேன், இந்துப்பு அவசியம் வீட்டில் இருக்க வேண்டியவையாகும்.

Monday, August 22, 2016

மூலிகைக் காற்று

மூலிகைக் காற்று மணக்கும் கொல்லிமலை!





            மனதிற்கும், உடலுக்கும் ஒருங்கே , உற்சாகமும் ஊக்கமும் அளிக்கவல்ல இடங்களில் , மலை சார்ந்த இயற்கையின் அற்புதங்களில் ஒன்றே, கொல்லிமலை.


  மூச்சு முட்ட பெட்ரோலிய வாகனங்களின் கரியமில மாசுக்காற்றினில் , வாழ்வினைக்கழிக்கும், நகர வாழ்க்கையின் வெகுதூரத்தே, நவீன உலகம் இன்னமும் கைவைக்காத இடந்தனில், அமைந்துள்ளது, கொல்லிமலை!


          மூலிகைக்காற்றினில், இயற்கையை சுவாசித்திட, வாகன மாசுக்கள்  இன்றி , வாகன இயந்திரங்களால் ஏற்படும் இடைவிடா  இரைச்சல் இன்றி, இயற்கையை இயற்கையோடு இணைந்து அனுபவித்திட, வாழ்ந்திட, இதமான தென்றலாகத் தவழ்ந்துவரும் மூலிகைக்காற்றினில், உடலும், உள்ளமும் புத்துணர்வு பெற்றிட, மனதில் அமைதி நிலவிட,  

இயற்கை அன்னையின்  அற்புதக் கொடையாம், அரப்பளீஸ்வரர் உறையும் பழம்பெரும் சிவாலயம் கொண்ட,  கொல்லித்தாய் காத்து நிற்கும், அமைதி தவழும் கொல்லிமலை  தரிசிப்போம்! இயற்கையோடு இணைந்து,  நல்லனுபவம் பெறுவோம்! 



செல்லும் வழித்தடம் : 

நாமக்கல் அல்லது சேலம் வழியாகச் செல்லலாம்!

Total Pageviews