Sunday, May 28, 2017

ஆழக்கடலுக்கும் கரைகள் உண்டு!


ஆழக்கடலுக்கும் கரைகள் உண்டு!

ஏறாத மலைக்கும் ஒரு அடிவாரம் உண்டு!

ஒவ்வொரு வெற்றிக்கும் பல தோல்விகள் உண்டு!

கரையில் நின்றால், கால்கள் நனையலாம்,
அலைகளை வென்று ஆழ்கடலில் முத்தெடுக்க முடியுமா?

அடிவாரத்தில் இருந்தால் , காற்று வாங்கலாம்,
பாறைகளை வென்று உச்சியை எட்டி சாதிக்க முடியுமா?

தோல்விகளுக்குப்  பயந்தால், பாரமாய் வாழலாம்,
தடைகளை வென்று,  இலட்சியத்தை அடையமுடியுமா?


இடையூறுகளே, வெற்றியை நெருங்க வைக்கும்!

எண்ணத்தில் உறுதி கொண்டு, வெல்வோம் தோல்விகளை!

முயற்சிகள் வலுவாகும்!  இலட்சியங்கள் ஈடேறும்!!

Friday, May 26, 2017

விட்டு வைக்கலாம் இல்லையா,


எல்லோருக்கும், எப்போதும்
எவ்வித வேறுபாடும் கொள்ளாது, 
இலைகளை,கனிகளை,வேர்களை,
தன் நிழலை, நல்ல காற்றை வழங்கும்,
மரங்கள் போல், நாம் இல்லைதான் !

ஆயினும்,

நமது வருங்கால தலைமுறைகளுக்கும்,
தன்னலம் இல்லா மரங்களின் சேவைகள்  தொடர,

விட்டு வைக்கலாம் இல்லையா,
வெட்டாமல் ?!

நட்டு வைக்கலாம் இல்லையா, 
இடமெல்லாம்?!

மரங்களைப்போல, மனங்கள் இல்லாவிடினும்,
பட்ட கடனுக்காகவாவது...?!

Wednesday, May 17, 2017

வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்கள்!



வெற்றிகளில் சாதனைகளை,  
படைத்தவர்க்கும் ,

சாதனைகளில் வெற்றிகளை, 
அடைந்தவர்க்கும்!



Thursday, May 11, 2017

நம்பிக்கையே வாழ்க்கை!

நம்பிக்கையே வாழ்க்கை!



சொல்லவும், ஒரு நம்பிக்கை வேண்டும் !

சொல்பவனிடத்தும், நம்பிக்கை வேண்டும் !

வெறும்  வார்த்தைகளை, சொல்வதும், கேட்பதும்,

படிப்பதற்கும், இடிப்பதற்கும் ஒப்பாகும்!

மனதின் வளம், வார்த்தைகளில்..!

மனிதனின் வளம், செயல்களில்..!

நல்ல எண்ணங்களைக்கொண்டு, ஏற்றம் பெறுவோம்! 

எங்கும் மனிதமே,  பேணுவோம்!


நல்வாழ்த்துக்கள்!

தோழமையுடன்,

ஞானகுமாரன்.








Total Pageviews