Sunday, July 30, 2017

இன்றைய நிஜம்!







கனவாகிப்போன நிஜத்தின் எச்சம்,
இன்னும் இருக்கிறது,
காய்ந்த விழிகளின் ஓரத்தில்,
கசந்த வாழ்வின்  தழும்புகளாக!

மேலும் .வாசிக்க...

Thursday, July 20, 2017

கரையோரக்கனவுகள்




அலையே என்னைத் தழுவாயோ !
ஆசை முத்தம் அன்பாய்த் தாராயோ !
எத்தனை ஆண்டுகள்! எத்தனை யுகங்கள்!
எல்லாம் நொடிப்பொழுதாய் ஆனதே!
நித்தமும் உன் வருகை கண்டதும்!

வாசல் வரை வந்து நீ வாராமல் போனதென்ன,
என்னை காத்திருக்கச் செய்துவிட்டு,
நீ காணாமல் போவதென்ன.

என்ன பாவம் செய்தேன், நீ என்னை 
ஒதுக்குகிறாய்!
உன்னை நினைத்தது பாவமா!
உன் அணைப்பில் இருக்க எண்ணியதே பாவமா,
பார்க்கும்  போதெல்லாம், சிங்காரிக்கிறேன்,
பாராமல் போகும்போது  அழகழிக்கிறேன்!

என் வாட்டம் நீ கண்டால், வாடுவாய், 
எண்ணியே நான் மீண்டும் அலங்கரிக்கிறேன் 
உன் வரவுக்காக!

ஏமாற்றாதே அன்பே! நீ தந்த ஏமாற்றத்தையே 
வரமாக எண்ணி, விழிகளால் உன் வழி நோக்கி,
வருகிறேன் உன்னோடு!
அணைத்துக்கொள்! என் இறப்பிலாவது...!
...................................
...................................
நானும் நீயும் இணைந்தால், என்னை நீ அழித்திடுவாய்  
என உன்னை அழிப்பார் உலகோர், என்றே  விலகினேனடி!
அவர்கள்    நம்மை அழிக்குமுன்,
காட்டாற்று பாய்ச்சல் கொண்டு,கரையைக் கரைத்த புது வெள்ளம்,
உன்னையும் சுழற்றிவீசியதே! என்னில் உன்னைச் சேர்த்ததுவே!
நாம் ஒன்று சேர,  இதுவே வாய்ப்படி!
என்னால், உன்னைத் தொலைத்தாய்!
என்னில், உன்னை சுமக்கிறேன் நான்!
கண்ணீரலைகளின் ஓரத்தில் ..!

கரையோர நாணல்கள், அலையின் அணைப்பில்.. 
கரை சேரத்துடிக்கும் கதை.

ஞானா.





Total Pageviews